உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தைகள் அறிவியல் கண்காட்சி போட்டியில் சாத்தான்குளம் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி

Published On 2023-11-04 08:22 GMT   |   Update On 2023-11-04 08:22 GMT
  • தமிழ்நாடு சயின்ஸ் போரம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வல்லநாட்டில் நடைபெற்றது.
  • இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது.

சாத்தான்குளம்:

தமிழ்நாடு சயின்ஸ் போரம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வல்லநாட்டில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இல்லம் தேடி கல்வி மாணவர்கள் குமரன், பிரகதீஷ் மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டுவெற்றி பெற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற உள்ள மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் உமா மகேஸ்வரி, பொன்ரதி ஆகியோரை சாத்தான்குளம் வட்டார கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News