உள்ளூர் செய்திகள்

மன்னார்குடி ஒன்றிய தலைவர் சேரன்குளம் மனோகரன் மரக்கன்றுகள் நட்டார்.

மரக்கன்று நடும் விழா

Published On 2023-01-18 07:23 GMT   |   Update On 2023-01-18 09:06 GMT
  • பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
  • தெய்வீக வனங்களை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நட்டார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், 96.நெம்மேலி ஊராட்சியில் மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட் சங்கமாஸ் இன்டர்நேஷனல், ஐயோஃபா மற்றும் 108 தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 108 இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்து மரக்கன்றுகள் நடதிட்டமிட்டது.

அதன்படி, மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் தி.மனோகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News