உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடப்பட்டது.

மரக்கன்று நடும் விழா

Published On 2022-10-20 16:02 IST   |   Update On 2022-10-20 16:02:00 IST
  • இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
  • 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News