உள்ளூர் செய்திகள்
பழவூர் அருகே லாரியில் மணல் கடத்தல்
- லெவிஞ்சிபுரம் கிராமத்தின் வருவாய் ஆய்வாளர் ஜெபா நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள லெவிஞ்சிபுரம் கிராமத்தின் வருவாய் ஆய்வாளர் ஜெபா நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றார். அப்போது கண்ணன்குளம் பகுதியில் ஒரு தென்னந்தோப்பு அருகே சிலர் ஜே.சி.பி. மூலமாக லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அதிகாரியை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் ஜெபா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.