உள்ளூர் செய்திகள்

எலிபேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2023-09-05 15:44 IST   |   Update On 2023-09-05 15:44:00 IST
  • சுஷ்மா இவர் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
  • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சேலம்

சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்தவர் கதிரவன். இவரது மகள் சுஷ்மா வயது (23), பி.எஸ்.சி. பி. எட். பட்டதாரியான இவர் நேற்றிரவு எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தீராத வயிற்று வலியால் சுஷ்மா அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் மனம் உடைந்து எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News