உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி எம்.பி.ஏ. பட்டதாரி தலை நசுங்கி சாவு

Published On 2023-09-25 15:37 IST   |   Update On 2023-09-25 15:37:00 IST
  • விக்னேஷ் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • தியேட்டர் அருகே சென்றபோது கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை இடது புறமாக முந்தி செல்ல முயன்றார்.


சேலம்:

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் (31). எம்.பிஏ பட்டதாரியான இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தியேட்டர் அருகே சென்றபோது கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை இடது புறமாக முந்தி செல்ல முயன்றார்.அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர் பஸ்சிற்குள் விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் தலையின் மேல் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் றந்தார். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் விக்னேஷின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை டிரைவர் இளையராஜா (47) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள விக்னேஷின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் சோகமான சூழல் நிலவியது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் விக்னேஷின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.

Tags:    

Similar News