உள்ளூர் செய்திகள்

பிணமாக கிடந்தவர்களை படத்தில் காணலாம்.

சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்பு

Published On 2023-05-20 09:14 GMT   |   Update On 2023-05-20 09:14 GMT
  • ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
  • அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

முதியவர் பிணம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையங்கு முன்பு உள்ள ஆலமரக்காடு டாஸ்மாக் அருகில் நேற்று மாலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளப்பட்டி போலீசார், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசராணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News