உள்ளூர் செய்திகள்

கடைக்கு புறப்பட்டு சென்ற கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-06-03 14:51 IST   |   Update On 2023-06-03 14:51:00 IST
  • பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
  • இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

சேலம்:

சேலம் அன்ன தானப்பட்டி நாரா யணபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. கூலி தொழிலாளி. இவ ரது மகள் சிவஜோதி (வயது 19). இவர், பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்க ளது மகளை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மாய மான கல்லூரி மாணவி சிவ ஜோதியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானதற்கு காதல் விவகாரம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News