உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கொலை வழயில் ரவுடி உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Published On 2023-06-27 09:05 GMT   |   Update On 2023-06-27 09:05 GMT
  • சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
  • இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சேலம்:

சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், ரகு, லட்சுமியிடம் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ரகு தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கொடூரமாக லட்சுமியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளி களை தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி ரகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தொடர்ந்து போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமதுல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் (வயது 29), சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி அய்யர் வீதியை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய 3 பேரும் நேற்று பவானி ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து நீதிபதி, சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ஏற்கனவே சரண் அடைந்த ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் அவரது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீசார், இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரகு உள்பட 4 பேரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார்கள்.

அதன்அடிப்படையில் போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

Tags:    

Similar News