உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு

Published On 2023-06-02 09:03 GMT   |   Update On 2023-06-02 09:03 GMT
  • சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
  • பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு வந்த போது, காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டு இருந்தது.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 34), பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், நேற்று சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு வந்த போது, காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகு மார், சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் காரை உடைத்து லேப்டாப்பை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் மர்ம நபரின் உருவம் ஏதும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News