உள்ளூர் செய்திகள்

தாபா ஓட்டலில் தகராறு விசாரிக்க சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்

Published On 2023-05-26 09:31 GMT   |   Update On 2023-05-26 09:31 GMT
  • மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.
  • என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.

சேலம்:

சேலம் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரராக பணியாற்றி வருபவர் முகமது அலி. இவர் நேற்று மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.

அப்போது, அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு முகமது அலி சென்று பார்த்தபோது, தகராறில் ஈடுபட்ட வெளியூரை சேர்ந்த 5 பேர் கொண்ட ஒரு தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். ஓமலூர் அருகே கோட்டக் கவுண்டம்பட்டியை சேர்ந்த 5 பேர் கொண்ட மற்றொரு தரப்பினர் அங்கு இருந்தனர்.

அவர்களிடம் முகமது அலி விசாரணை நடத்தினார். அப்போது ஆத்திரமடைந்த அந்த 5 பேரும் போலீஸ்காரரை தாக்கினர். இதுகுறித்து முகமது அலி உடனடியாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் முகமது அலி கொடுத்த புகாரின் பேரில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முகமது அலி மீது தாக்குதல் நடத்தியதாக சண்முகம் (வயது 22), மணிகண்டன் (29), விஜய் (25), தினேஷ் (31), வெங்க டேசன் (35) ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது போதையில் தகரா றில் ஈடுபட்ட நபர்களை விசாரிக்க சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News