உள்ளூர் செய்திகள்

சேலம் கொண்டலாம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-06-14 07:55 GMT   |   Update On 2023-06-14 07:55 GMT
  • இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.
  • இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

சேலம்:

சேலம் கொண்டலாம் பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் விஷம் குடித்த நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இன்று அவரது உடல் பிரேதபரி சோதனைக்கு பின் உறவின ர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News