உள்ளூர் செய்திகள்

பயணியிடம் செல்போன் பறித்த வாலிபரை விரட்டி பிடித்த ஏட்டு

Published On 2023-10-03 09:45 GMT   |   Update On 2023-10-03 09:45 GMT
  • இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
  • ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுகவனேஷ் (வயது 18).

இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகவனேஷ் கூச்சலிட்டார்.

இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளப்பட்டி போலீஸ் ஏட்டு திருப்பதி செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த பாபு என்கிற பக்ருதீன் (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டு வாலிபரை துரத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News