உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக செல்லும் சிறப்பு ரெயில் செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு

Published On 2023-07-12 14:47 IST   |   Update On 2023-07-12 14:47:00 IST
  • பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
  • இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் நள்ளி ரவு 12.30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது.

கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்த ெரயில் நின்று செல்லும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News