உள்ளூர் செய்திகள்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் 24-ந் தேதி முதல் தொடங்குகிறது

Published On 2023-10-19 15:21 IST   |   Update On 2023-10-19 15:21:00 IST
  • நேற்று காலை கோவிலில் மேள, தாளங்கள் முழங்க புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • இதையொட்டி நடந்த சிறப்பு பூைஜகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

சேலம்:

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதை யொட்டி கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

புதிய கொடி மரம் நடுதல்

நேற்று காலை கோவிலில் மேள, தாளங்கள் முழங்க புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பூைஜகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

கணபதி வழிபாடு

இன்று (19-ந் தேதி) மாலை 6 மணி மணிக்கு மேல் மங்கள இசை, கணபதி வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்ச கவ்யம், கிராம சாந்தி, அஷ்டபலி வழிபாடு, பிரவேச பலி வழிபாடு நடக்கிறது.

24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் கணபதி வழிபாடு, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக அழைத்து வருதல் நடக்கிறது. இரவு 830 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

முதற்கால யாக பூஜை

25-ந் தேதி காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

கும்பாபிஷேக விழா

27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News