உள்ளூர் செய்திகள்

குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

Published On 2023-10-13 09:51 GMT   |   Update On 2023-10-13 09:51 GMT
  • பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
  • மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும்.

சேலம்:

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.

அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News