உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் வாகனம் மோதி சாவு

Published On 2023-07-06 09:24 GMT   |   Update On 2023-07-06 09:24 GMT
  • சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி.
  • இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வீரமணி (வயது 27). திருமணம் ஆகாத இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், வீரமணி இன்று அதிகாலை வீராணம் மெயின் ரோடு சுக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News