உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-11-14 09:25 GMT   |   Update On 2023-11-14 09:25 GMT
  • சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சேலம்:

சேலம் மாவட்டம் சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News