உள்ளூர் செய்திகள்

தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம்; இளம்பெண் தற்கொலை

Published On 2023-07-18 09:14 GMT   |   Update On 2023-07-18 09:14 GMT
  • தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
  • கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவரை அவரது தாய் பாக்கியம் உள்பட உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தனியாக இருந்த அவர் விஷ இலையை அரைத்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதனை பார்த்த தாய் பாக்கியம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனி ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாப மாக இறந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News