உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
- ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
- ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமசாமி (வயது 55). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று ஆட்டோவில் சென்றார்.
ஆட்டோ, நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, ஆட்டோவில் இருந்து ராமசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.