உள்ளூர் செய்திகள்

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்தேங்காய் பருப்பு ரூ.6.48 லட்சத்துக்கு ஏலம்

Published On 2023-07-05 07:28 GMT   |   Update On 2023-07-05 07:28 GMT
  • கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து.
  • இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து. இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 7 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ.108 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போது ஏலத்தில், முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7190 முதல் ரூ.8230 வரை விற்பனையானது.

இரண்டாம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.5575 முதல் ரூ.6486 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 561 மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனையானது.

Tags:    

Similar News