உள்ளூர் செய்திகள்

பெயிண்ட் அடிக்க வந்த வீட்டில்நகை திருடிய தொழிலாளி கைது

Published On 2023-08-02 10:03 GMT   |   Update On 2023-08-02 10:03 GMT
  • நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
  • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நித்தியானந்தம் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நகைகளை திருடியதாக மணியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News