உள்ளூர் செய்திகள்
தாரமங்கலம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
- நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
- இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.