உள்ளூர் செய்திகள்

மனைவியை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்த கணவர் கைது

Published On 2023-06-24 08:06 GMT   |   Update On 2023-06-24 08:06 GMT
  • நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
  • நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக இருவரும் சேலம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நளினி தேவி சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து ராமமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News