உள்ளூர் செய்திகள்

வீரகனூர், தலைவாசலில் கன மழை

Published On 2023-11-04 07:18 GMT   |   Update On 2023-11-04 07:18 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் கன மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 18, சங்ககிரி 9, கெங்கவல்லி 7, கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆத்தூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News