உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.  

அடிப்படை வசதி செய்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-06-06 14:56 IST   |   Update On 2023-06-06 14:56:00 IST
  • புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
  • அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

சேலம்:

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44-வது டிவிசன், புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அளித்த உத்தரவின்படி, உடனடியாக சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செய லாளர் செல்வக் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் சூரிய மூர்த்தி, மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பழனி, பெரியசாமி, மண்டல தலைவர் பால கஜேந்திரன், செயலாளர் சம்பத்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்மா பேட்டை போலீசார், அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News