உள்ளூர் செய்திகள்

சேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணமாக மீட்பு

Published On 2023-06-24 09:24 GMT   |   Update On 2023-06-24 09:24 GMT
  • 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.
  • பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

சேலம்:

சேலம் 4 ரோடு பகுதியில் கடந்த 19-ந் தேதி, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப் பட்டி போலீசார், முதியவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த முதியவர் 4 ரோடு பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததும், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்தது தெரிய வந்தது. ஆனால், இவரது பெயர், முகவரி தெரியாத நிலை யில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News