உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்சேலத்தில்14 பேர் கைது

Published On 2023-07-06 14:52 IST   |   Update On 2023-07-06 14:52:00 IST
  • பிரபல ரவுடி சூரி (வயது 65). இவர் மீது பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • கொலை வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சூரியிடம் விசாரணை நடத்தினார்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளை யத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூரி (வயது 65). இவர் மீது பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் கொலை வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சூரியிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடைபெற்றது.

அப்போது போலீசாருக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 14 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

Similar News