உள்ளூர் செய்திகள்

மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாரியம்மன் தேரோட்டம்.

மன்னாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

Published On 2023-07-01 09:11 GMT   |   Update On 2023-07-01 09:11 GMT
  • மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
  • வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.

வாழப்பாடி:

வாழப்பாடி – மன்னாயக் கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற பிறகு, வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.

வாழப்பாடி திரவுபதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் நடைபெற்றது. இதனையடுத்து, மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா நடத்திட முடிவு செய்தனர்.

கடந்த 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், அம்மன் திருத்தேர் ரதமேறுதல் மற்றும் பக்தர்கள் அலகுகுத்தி, கரகமெடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்றும் நேற்று முன்தினமும், ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

Tags:    

Similar News