உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய முதியவர் பலி

Published On 2023-11-07 09:15 GMT   |   Update On 2023-11-07 09:15 GMT
  • ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

சேலம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே. கே. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News