- ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார்.
- நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்த போது அவரது செருப்பு மட்டும் கிணற்றின் மேல் பகுதியில் கிடந்தது. பின்னர் கிணற்றுக்குள் பார்த்த போது ராஜா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர்.இதற்கிடையேஅங்கு வந்த போலீசாரும் உறவினர்களும் இணைந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது சகோதரர் கந்தமணி, கொடுத்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.