உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி வாலிபர் சாவு

Published On 2023-10-01 08:34 GMT   |   Update On 2023-10-01 08:34 GMT
  • விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
  • அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தடுப்பு சுவரில் மோதி பலி

அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News