மல்லியகரை அருகே போதையில் கிணற்றில் விழுந்த வாலிபர் சாவு
- கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார்.
- கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மல்லியகரை அருகே உள்ள கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆடி 18 கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். இதையடுத்து அவரது மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் கனகராஜை தேடினர். இதனிடையே கனகராஜின் வீட்டின் அருகில் கிணறு ஒன்று உள்ளது. இதில் 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமிராவை உள்ளே அனுப்பி பார்த்துள்ளனர். அப்போது கனகராஜ் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் அவர் போதையில் தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.