உள்ளூர் செய்திகள்

சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2023-08-16 07:03 GMT   |   Update On 2023-08-16 07:03 GMT
  • கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
  • 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

சேலம்:

சேலம் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஹரிஹரன் (24) பொன்னம்மா பேட்டையில் பழனிச்சாமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.

கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று மதியம் 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் பரிதாமாக இருந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News