உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2023-07-10 07:04 GMT   |   Update On 2023-07-10 07:04 GMT
  • ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
  • இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்துக்கு தகவல் கொடுத்தார்.

இதை தொடர்ந்து போலீ சார் விரைந்து சென்று இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து தெரி யவில்லை. இதனால், அவரது உடலை உறவினர் களிடமும் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது.

இறந்த நபர் நீலம் நிற ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுகை சட்டை, காபி கலர் ஜட்டி அணிந்திருந்தார். அவரது இடது, வலது நெஞ்சு பகுதியில் ஒரு கருப்பு மச்சம் காணப்படு கிறது என போலீசார் தெரிவித்தனர்.

அவரை பற்றி அறிந்த வர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News