உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அடுத்தடுத்து விபத்து வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2023-10-15 07:26 GMT   |   Update On 2023-10-15 07:26 GMT
  • பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
  • இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

சேலம்:

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் ராவணன்.இவரது மகன் சுந்தரேஸ்வரன் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் அரிசிபாளையம் ரத்தினசாமி புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). இவர் சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணியன் காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News