உள்ளூர் செய்திகள்

பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள்

ஏற்காட்டில் பூட்டப்பட்ட சுகாதார வளாகம்

Published On 2023-08-19 08:12 GMT   |   Update On 2023-08-19 08:12 GMT
  • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
  • ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

ஏற்காடு:

ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு ஏற்காடு ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது .

இதில் கழிவறை, குளியலறை என அனைத்து வசதிகளும் உள்ளது. ஏற்காடு டவுன் ஊராட்சி மன்றம் இதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்தது. அதிகளவில் ஜெரினாகாடு பொது மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.

பூட்டப்பட்ட வளாகங்கள்

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த சுகாதார வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஜெரினாகாடு பொது மக்கள் பெருமளவு சிரமப்படுகின்றனர். இது குறித்து ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரனிடம் கேட்டபோது:-

கடந்த 10 நாட்களாக தண்ணீர் தொட்டி மற்றும் எலக்ரீசியன் பணிகள் நடந்தால் இவ்வளாககங்கள் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 10 நாட்களாக சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் ஜெரினாகாடு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News