உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை; பெண் உள்பட 5 பேர் கைது

Published On 2023-04-09 07:49 GMT   |   Update On 2023-04-09 07:49 GMT
  • குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
  • போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் முதுநகர், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய பகுதிகளில் இருந்த கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பம் சுகுமார், நெய்வேலி சாவித்திரி, முதுநகர் தினேஷ், சாலக்கரை மாரியப்பன், திருவந்திபுரம் சிவன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News