உள்ளூர் செய்திகள்

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்

Published On 2022-06-25 09:36 GMT   |   Update On 2022-06-25 09:36 GMT
  • ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் காலி பதவி இடங்களுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் சேலம் ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி பதவிகளில் பூவனூர் 3-வது வார்டுக்கு ஒருவர், நடுப்பட்டி 7-வது வார்டு, கூனாண்டியூர் 7-வது வார்டு, கீரிப்பட்டி 6-வது வார்டு ஆகியவற்றிற்கு தலா 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.புல்லா கவுண்டம்பட்டி 7-வது வார்டு ஒருவர், தேவியாக்குறிச்சி 2-வது வார்டுக்கு ஒருவர், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் ஒருவர், இளவம்பட்டி 5-வது வார்டு ஒருவர், நீர்முள்ளிகுட்டை 6-வது வார்டு ஒருவர் என 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மின்னாம்பள்ளி 3-வது வார்டு பொட்டனேரி, 6-வது வார்டு ஒருவர் கூட இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.A

Tags:    

Similar News