உள்ளூர் செய்திகள்

தென்காசி கல்குவாரி விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் -முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கோரிக்கை

Published On 2022-09-15 09:07 GMT   |   Update On 2022-09-15 09:07 GMT
  • தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
  • விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

தென்காசி:

முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

மேலும் அங்கே விதிகளை மீறி அதிக அளவு ஆழத்தில் துளையிட்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடித்ததால் தான் நில அதிர்வு ஏற்பட்டு உயரமான பகுதியில் இருந்து பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை தற்செயல் விபத்து மரணம் என்ற 174- வது பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.

விதிமுறைகளை பின்பற்றாத அந்த குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து குவாரி இயங்குவதை தடை செய்ய வேண்டும்.

விபத்தில் பலியான பரமசிவம் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் தொழிலாளர் நலச் சட்டப்படி குவாரி உரிமையாள ரிடமிருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த குவாரியில் கனிமவளத்துறை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒளிவு மறைவற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகள் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News