உள்ளூர் செய்திகள்

பணகுடி அருகே பூட்டிய வீட்டில் ரூ.40 ஆயிரம் பொருட்கள் திருட்டு

Published On 2023-07-22 14:15 IST   |   Update On 2023-07-22 14:15:00 IST
  • பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
  • அறைகளில் இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.

நெல்லை:

பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள மாறன்குளம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் செல்லப்பா. இவரது மகள் பாப்பா(வயது 36). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். பீரோவில் பணம் இருக்கிறதா என்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்குள்ள அறைகளில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களை திருடிச்சென்றார்.

இதுகுறித்து பாப்பா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News