உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

Published On 2022-11-11 13:25 IST   |   Update On 2022-11-11 13:25:00 IST
  • திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
  • சந்தோஷ் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (36) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தொழிற்சாலையில் உள்ள இருப்புகளை சரி செய்து பார்த்தபோது அந்த தொழிற்சாலையில் இருந்த காப்பர் வயர்கள், தளவாடப் பொருட்கள் என ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து சந்தோஷ் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து தனியார் மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Similar News