உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வழிப்பறி கொள்ளை கும்பல் கைது

Published On 2023-01-01 07:24 GMT   |   Update On 2023-01-01 07:24 GMT
  • அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
  • வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை தாக்கி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இதில் காயமடைந்த ஜோதிமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சேர்ந்த சுரேஷ் ராகுல் (வயது 19), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த 18 வயது சிறுவன், திருப்பூர் மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுவன், குறிஞ்சிப்பாடி வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News