உள்ளூர் செய்திகள்
வழிப்பறி, கொலை முயற்சி வழக்கு: நெல்லை ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர்.
- வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சேலம்:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வியாசராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 33). இவர் தற்போது சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி தெருவில் வசித்து வருகிறார்.
செவ்வாபேட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று போலீசார் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் உள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவு நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.