உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே 2 வீடுகளில் நகை திருடிய கொள்ளையன் கைது

Published On 2022-12-10 15:06 IST   |   Update On 2022-12-10 15:06:00 IST
  • சங்கர் திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார்.
  • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

வடவள்ளி,

கோவை சோமையம்பாளையம் மாங்கல்யன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவர் கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றார்.

திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி சங்கர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசுார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சங்கர் வீட்டில் கைவரிசை காட்டியது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்பாபு (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

தினேஷ்பாபு, கல்வீரம்பாளையம் நிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்த தீபா (40) என்பவரது வீட்டிலும் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். அந்த ெகாள்ளை தொடர்பாகவும் தினேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது.

பின்னர் தினேஷ்பாபு கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க ப்பட்டார்.

கோவை ஓனப்பாளையம் அடுத்த உளியம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நேற்று முன்தினம் காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராயை ஆய்வு செய்தனர்.

அதில் இரவு மர்ம நபர் கோவிலுக்கு புகுந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்த சி.சி.டி.வி. காமிரா காட்சியுடன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News