உள்ளூர் செய்திகள்

தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புங்கனூர் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி

Published On 2022-06-29 09:32 GMT   |   Update On 2022-06-29 09:32 GMT
  • சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
  • புங்கனூர் ஊராட்சியில் உள்ள நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் உள்ள சாலைகள்குண்டும், குழியுமாக சேதமடைந்தி ருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதனை யடுத்து சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்துசீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புங்கனூர் ஊராட்சிக்கு சாலை அமைத்திட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ஊராட்சி நிதி ரூ.4.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைக்கொண்டு புங்கனூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசல்தெரு, நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு, ரஹ்மான்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம்கமாலூதீன் பார்வையிட்டார். சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News