உள்ளூர் செய்திகள்

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோய் பரவும் அபாயம்

Published On 2023-11-08 08:49 GMT   |   Update On 2023-11-08 08:49 GMT
  • கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
  • ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவு மையம் அமைந்து உள்ளது.

அங்கு பொதுமக்கள் கை கழுவும் இடத்தில் ஒரு தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இது கடந்த சிலநாட்களுக்கு பழுதடைந்து விட்டது.

எனவே அந்த பகுதியில் தற்போது குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் குளம்போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனையில் நோய் ஏற்படும் அவல நிலை உள்ளது.

எனவே வால்பாறை ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் குழாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News