உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் பேசினார். 

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2022-12-24 10:11 GMT   |   Update On 2022-12-24 10:11 GMT
  • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
  • வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறும்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரது தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News