உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

Published On 2022-06-23 09:29 GMT   |   Update On 2022-06-23 09:29 GMT
  • தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
  • தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சயன் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் கதிரவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News