உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தவறி விழுந்து பலி
- தடபெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து.
- தலையில் பலத்த காயம் அடைந்த முத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இறந்தார்.
பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 62). ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர் வீட்டில் இருந்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.